Sunday, September 5, 2010

பித்த வெடிப்பு

பித்த வெடிப்பு என்பது பெரும்பாலும் கால்களில் ஏற்படுவது.  கை கால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விள்ளகேண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து தடவ குணமாகும்.

பித்த வெடிப்பு என்பது நமது பித்தம் அதிகமானால் வரக்கூடிய ஒன்றாகும்.

Friday, August 20, 2010

வாய்ப்புண் குணமாக

வாய்ப்புண் குணமாக நெஞ்சில் இலை சாறை காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.  வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி இலையை மென்று தின்றால் குணமாகும்.  மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் மற்றும் குடல் நோய்கள் குணமாகும்.

Thursday, August 19, 2010

பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து.  வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும்.  மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும். 

வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது.  இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது. 

வழுக்கையில் முடிவளர

வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே.  கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.

Wednesday, August 18, 2010

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள்.  ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.  அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

Tuesday, August 17, 2010

ஜலதோஷம்

 ஜலதோஷம் என்பது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காரணம் நமது தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதே.  ஈரக்காற்றில் உலவுவதால் அல்லது மழையில் நனைந்ததினால் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி  பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

Wednesday, August 4, 2010

தேமல், தோல் கரும்புள்ளிகள் மறைய

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் சுழித்து குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி தீரும்.  இதை தொடர்ந்து பூசி வர தேமல் மற்றும் தோல் கரும்புள்ளிகள் மறைவதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகம் நல்ல மலர்ச்சியடையும்.

கீழாநெல்லி இலை மற்றும் கொதுமலை இலையை உள்ளுக்கும் சாப்பிட்டு இன்னும் முகத்தை மெருகேற்றலாம்.

Sunday, August 1, 2010

ஆறாதபுண் குணமாக

மருதாணி இலைகளை துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் காய்ந்தவுடன் அதில் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைபோல் அரைத்து பின் தேவையான அளவு துணியில் பூசி, மருந்தை புண்ணின் மீதுப்படும்படி வைத்து கட்டு போட வேண்டும்.  இனது நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் புண் நன்றாக ஆறிவிடும். 

Monday, July 26, 2010

இருமல் குணமாக

இருமல் குணமாக அரச மரத்துப்பட்டையை பொடியாக்கி  காயவைத்து பின் வறுத்து கரிபோல் ஆனவுடன் தூள் செய்து கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு கரண்டி அளவு பொடித்தூளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடித்து வர நல்ல பலன் தெரியும்.

நாள் தவறாமல் துளசி இலைகளை காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வர இருமல் சளி அறவே நெருங்காது. 

சளிப் பிடிப்பதில் பெரும்பங்கு நாம் குடிக்கும் தண்ணீரே காரணம். ஆகவே எந்த தன்நீரானாலும் காய்ச்சி குடித்து பழகுங்கள்.  வெளியில் சென்று உணவு எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் காய்ச்சிய நீர் அல்லது அகோபினா அண்ட் கின்லே போன்ற தரமான பாக்கேஜ் குடிநீரை குடிக்க பழகினால் சளி பிடிப்பதில் இருந்து தப்பிக்கலாம். 

Sunday, July 25, 2010

மஞ்சள் காமாலை குணமாக

மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Saturday, July 24, 2010

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.  பேன் நீங்கும். 

முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு.  அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.

நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும். 

தொண்டை சதை வளர்ச்சி குறைய

தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலைச் சாறு, துளசி இலைச்சாறு நூறு வீதம் எடுத்து நல்லெண்ணெய் ஐநூறு மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி எண்ணெயை போட்டிளில் வைத்து கொள்ளவும். 

தினசரி ஒரு கரண்டி அளவில் எண்ணெய் எடுத்து வயில்விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும்.  இதுமாதிரி குறைந்தது பத்து நாட்கள் கொப்பளிக்க தொண்டை சதை வளர்ச்சி குறைந்து குணம் தெரிய ஆரம்பிக்கும். 

தொடர்ந்து செய்து வர நல்ல குணம் உண்டாகும். 

Friday, July 23, 2010

தலை சுற்றல் குணமாக

தலை சுற்றல் குணமாக சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவற்றை ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் அரை கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.  இதை சுமார் நாற்பது நாட்கள் செய்தால் பூரண குணமடையலாம்.

பித்த வெடிப்பு

பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

பித்த வெடிப்பு உள்ளவர்கள் கண்ட மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.  ஏனென்றால் அவை மேலும் புண்ணாகிவிடும்.  சித்த வைத்தியம் பற்றி இன்னும் சில மருத்துவ செய்திகளை இங்கே தர இருக்கிறோம். அது உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். 

குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க

10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க வாய்விடங்காய் 5 கிராம், கடுகு, ரோகினி 5 கிராம், அவுரி ஐந்து கிராம், வேப்பன்கொழுந்து ஐந்து கிராம், தும்பை இலை ஐந்து கிராம் சுடுகோடு வாய்விடங்காய் லேசாக வறுத்து இலைகளை தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடன் மிளகு அளவு உருண்டையாக செய்து நிழலில் உலர்த்தவும் ஐந்து வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதிரியும், இரவு படுக்க போகும் முன் கொடுக்கவும்.  வாரம் ஒரு முறை அல்லது மூன்று வாரங்கள் கொடுக்க பேதி ஆகாது.  இம்மருந்து வயிற்றில் உள்ள பூசிகளை அடியோடு ஒழிக்கும்.  பெரியவர்களும் சாப்பிட பூச்சி தொல்லை அறவே ஒழியும். 

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய்

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய் வாங்கி தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காயவிடுங்கள்.  நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ஆக்குங்கள்.  ஏலக்காய் பொடி செய்து கொள்ளுங்கள்.  வாழைக்காய் பவுடர் 500 கிராம், பனங்கல் கண்டு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் இந்த பௌடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் கற்பூரவாழை பழம் உடலழகுக்கு மிக நல்லது.

Monday, July 19, 2010

மார்பகப் புற்று நோய்

பொதுவாக பெண்களுக்கு வருகின்ற புற்று நோயில் மார்பகப் புற்று நோய் இரண்டாவது முக்கிய நோயாகும் (கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் முதல் இடத்தில் இருக்கின்றது) 35 வயதிற்கு மேல் ஏற, ஏற இந்த நோய் தாக்கப் படுவதற்கான அபயம் அதிகரிக்கிறது.  மாதவிடாய் ஆகின்ற பெண்களை விட மாதவிடாய் நிதர பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.

மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் எவை?

1. முதல் குழந்தை பேறு 35  வயதிற்கு மேற்பட்டு உண்டானாலும் அல்லது குழந்தை பேறு இல்லாமல் இருந்தாலும் இந்த நோய் வருவதற்கு வேண்டிய அபாயங்கள் அதிகம்.  அதிகமான குறை பிரசவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தாலும் அல்லது விரைவில் நிறுத்தினாலும் நோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

2. அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவை உண்பவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், உடல் பருமனாகக் கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

3. தொடர்ந்து கதிர் வீச்சுக்கு உட்படுபவற்குளுக்கும், மார்பக புற்றுநோய் வருவதற்கு வேண்டிய வாய்ப்பு அதிகம் உள்ளது. 

மரபு அணு வழியாக இந்த நோய் பரவுமா?

மரபு அணு வழியாக மார்பகப் புற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  10% மார்பக புற்றுநோய் மரபு அணு வழியாக பரவுகிறது. முக்கியமான மரபு அணுக்கள் BRCA-1, BRCA-2.

30 வயதிற்கு உட்பட்டு மார்பக புற்றுநோய் வந்தாலோ, பரம்பரையில் மூன்று பேருக்கு மேற்பட்டு இந்த நோய் தாக்கப் பட்டு இருந்தாலோ ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் புற்றுநோய் வந்தாலோ, இரண்டு மார்பகத்திலும் புற்றுநோய் வந்தாலோ மரபணு வழியாகவர பயப்பு உள்ளது.

சாதாரண மார்பக கொழுப்பு கட்டி மார்பக புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

Jibroma போன்ற கட்டிகள் புற்றுநோயாக மாறவே மாறாது.  ஆனால் சாதாரண கட்டியில் ATYPI CAL இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. 

மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எவை?

மார்பகத்தில் கட்டி காணப்படுதல் அந்த காடியில் வலி ஏற்படுதல் மார்பக காம்பில் நீர் போன்ற திரவ வடிதல் 

மார்பக புற்று நோயிற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

அறுவை சிகிச்சை முறை, நுண் கதிர் சிகிச்சை முறை, புற்றுநோய் மருந்து செலுத்துதல் முறை ஆகியவைகள் உள்ளன.

அறுவை சிகிச்சை முறையில் என்ன முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இங்கே உள்ளது.  முன்பெல்லாம் முழு மார்பகத்தை எடுத்துதான் குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறை இருந்தது.  ஆனால் இன்றோ கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் அகற்றி மார்பகத்தின் அழகும், அளவும் முற்றிலுமான குணப்படுத்த வேண்டிய முறை பின்படுத்தப்படுகிறது.

நோயை தடுக்கும் முறைகள் என்னென்ன? 

குழந்தை பேற்றை இருபதில் இருந்து இருபத்தைந்து வரை வைத்துக் கொள்ளவேண்டும்.  தேவையற்ற கரு கலைப்ப்பைத் தவிர்க்க வேண்டும்.  குழந்தைகளுக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.  கொழுப்பு சாது நிறைந்த உணவை குறைக்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.  உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும். 

மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப நிலையில் கண்டறிய முடியுமா? 

நிச்சயமாக முடியும்.  மோனோ கிராம் என்ற பரிசோதனையின் மூலம் மார்பகத்தில் கட்டி வருவதற்கு முன்பே மார்பக புற்று நோய் கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயின் மகள்களும், சகோதரிகளும் இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.  எல்லா பெண்களும் மார்பக புற்றுநோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.  புற்றுநோய் வருவதை தடுக்கும் முறைகளை அறிந்து அதற்கான முழு முயற்சிகாலையும் செய்யவேண்டும்.  நோய் வந்தவர்களும் வைத்திய முறையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பயத்தை தவிர்த்து தைர்யமாக இருக்கவேண்டும். 

Wednesday, July 14, 2010

இரத்தத்தில் சர்க்கரை அளவு

 இரத்தத்தில் சர்க்கரை அளவு நமது ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தான் சர்க்கரை என அழைக்கப்படுகிறது. இந்த சர்க்கரையை நாம் செயல்படுவதற்கு ஏற்ற ஆற்றலாக மாற்றும் சக்தி இன்சுலினுக்கு உள்ளது.  உடலில் இன்சுலின் சுரக்கும் இடம் கணையம். 

கணையத்தில் கோளாறு ஏற்பட்டு போதுமான அளவுக்கு இன்சுலின் சுரக்காத நிலையில், குளுக்கோஸ் ஆற்றலாக மாறுவதில் பிரச்சனைகள் ஏற்படும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் விளைவு, சர்க்கரை நோய். கணையத்தில் இன்சுலின் அறவே சுரக்காமல் போகும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி நோய் தீவிரமாகும்.  இந்த வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுளினையே நம்பி இருக்க வேண்டி இருக்கும். 

ஆயுள் முழுவதும் தினமும் இன்சுலின் ஊசி மருந்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் இத்தகைய வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.  இந்த வகை நோய்க்கு 'முதல் வகை சர்க்கரை நோய்' (Type 1) அல்லது 'ஐ.டி.டி.எம்.' (இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்தை நம்பி இருத்தல்) என்று பெயர். 

கணையத்தில் முழுமையாக இல்லாமல் ஓரளவு இன்சுலின் சுரப்பு இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகத்தான் இருக்கும்.  எனவே இத்தகைய சர்க்கரை நோயாளிகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாது.  இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இவர்கள் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியது இருக்கும்.

இந்த வகை நோய்க்கு 'இரண்டாம் வகை சர்க்கரை நோய்' அல்லது 'என்.ஐ.டி.டி.எம்.' (நான் இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாத வகை) என்று பெயர்.

உடலில் எவ்வித விளைவுகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி இருக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உண்டு.  பலத்த காயங்கள் ஏற்படும் போது அல்லது தலைச்சுற்றல் வரும் நிலையில் அல்லது கண்களைப் பரிசோதனை செய்யும் போது என இப்படி ஏதாவது ஒரு உடல் உபதைக்காக இரத்தப் பரிசோதனை செய்யும் நிலையில் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவரும்.

உடலில் தலை முதல் கால் வரை அணைத்து உறுப்புகளையும் தாக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உள்ளது.  குறிப்பாக கண்கள், இதயம், சிறுநீரகங்கள், கால் ஆகியவற்றை தாகும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு.  இன்சுளினையே நம்பியிருக்கும் முதல் வகை சர்க்கரை நோயாளிகள், ஐந்து அன்டுகல்லுகுள் விழித்திரையை சோதனை செய்து கொள்ள வேண்டும்.  குறிப்பாக இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகள், நோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விழித்திரையை சோதனை செய்து கொண்டால் போதும்.

ஆனால் இன்சுலின் நமியிராமல் மாத்திரை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பதிக்கப்படுவதர்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.  ஏனெனில் சர்க்கரை நோய் இருப்பதையே மிகவும் தாமதமாக ஒருவர் தெரிந்து கொள்ளும் நிலையில் விழித்திரையில் பாதிப்பு தொடங்கி இருக்கும்.  எனவே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகள் உடனடியாக விழித்திரையை சோதனை செய்து கொள்வது அவசியம்.

சிறுநீரகங்களை ஓசையின்றி தாக்கும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு.  இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே சிறுநீரக பாதிப்பு தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில் பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளும் இருக்காது.  எனினும் ஒரு சிலருக்கு நுனிப் பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், உணர்ச்சி இன்றி பஞ்சு மெத்தையில் நடப்பது போன்று இருத்தல் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.  கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு.

உங்கள் பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, அவரவருக்கு ஏற்ற சிறப்புக் காலணிகளை (எம்.சி.ஆர்.) அணிவது நல்லது.  பாதத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளுக்கு ஏற்ப காலணியை சர்க்கரை நோயாளிகள் அணியும் நிலையில், பாதத்தில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொண்டு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.  சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்குள் நடமாடும் போது வெறும் காலோடு நடக்கக்கூடாது.  காலணி அணிவது நல்லது.  ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ அல்லது எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.

காலில் ஆணையோ அல்லது தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்ட முயற்சிக்காதீர்கள், டாக்டரிடம் செல்லுங்கள்.  பாதங்களின் மேல் ஒத்தடம் கொடுக்க சுடுநீர் போட்டில்கலையோ அல்லது உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.  சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் சர்க்கரை நோயாளிகள் உஷாராக இருப்பது அவசியம்.  உத்தரமாக ஒருவருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  அவர் ஒரு குலோப்ஜாமுன் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு 300 மில்லி கிராமாக அதிகரித்துவிடும்.  ஆக குலோப்ஜாமுன் சாப்பிடக்கூடாது.  குலோப்ஜாமூனுக்குப் பதிலாக கொண்டைக் கடலை சுண்டலை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு நூறு மில்லி கிராமாக இருக்கும் அல்லது மிகக்குறைவான அளவே அதிகரிக்கும். எனவே கொண்டைக்கடலை மிக நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒருவேளை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது.  சதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகளை அதிகம் சாப்பிடுவது மிக ன்று.  ஏனெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தரக்கூடியது.  காய்களை அதிகமாகச் சாப்பிடும் நிலையில் அவற்றில் உள்ள நார்ச் சத்து இரத்தத்தில் உயரும் குளுக்கொசி உறிஞ்சி, சர்க்கரை அளவை சமச்சீராக வைத்திருக்க உதவுகிறது.  கேரட், பீட்ருட், உருளைகிழங்கு ஆகிய வேர்க்கய்கரிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.  ஏனெனில் மற்ற காய்களை விட இவற்றில் மாவுச்சத்து அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.  ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, தர்பூசணி பழங்களைச் சாப்பிடலாம்.  கொய்யாவைப் பழமாக சாப்பிடாமல் காயாக சாப்பிடலாம்.  அதில் உள்ள நார்ச்சத்து உதவும்.  குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது. மோர், உப்பு போட்ட எலுமிச்சைச்சாறு, சோடா, நீர்த்த நிலையில் உள்ள சூப்புகளை சாப்பிடலாம்.  அசைவ உணவில் ஆட்டு இறைச்சியை சாப்பிட கூடாது.  மீன், சிக்கன், முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடலாம்.  மீன், சிக்கனை எண்ணையில் பொறிக்காமல் முழம்பில் சமைத்து சாப்பிடலாம்.  சர்க்கரை நோய் பரம்பரை நோர், தாய்க்கோ அண்ட் தந்தைக்கோ சர்க்கரை நோய் இருந்தால் முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீர், இரத்த பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு :

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு :
எதுவும் சாப்பிடாமல் (வெறும்வயிற்றில்), 80-100 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140  மில்லி கிராம்

கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு. 
எதுவும் சாபிடாமல்... 120-140 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 160-180 மில்லி கிராம் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், சாப்பிட்டவுடன் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு தான் இரத்தத்தைப் பரிசொதனைக்குக் கொடுக்க வேண்டும்.

ஐந்து முக்கிய குறிப்புகள் : 

1) நாள்தோறும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

2) நாள்தோறும் மொத்தமாக 500 கிராம் காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிடுங்கள்.

3) வாரத்தில் ஐந்து நாட்கள் வேகமான நடைப்பயிற்சியைச் செய்வது நல்லது. (தினமும் 30 நிமிடங்கள்)

4) நாள்தோறும் ஐந்து கிராமுக்கு குறைவான உப்பை சேர்த்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு நன்மை தரும்.

5) ஒரு மாதத்திற்கு 500 கிராமுக்கு குறைவான கொழுப்பையே உண்ணுதல் சாலச்சிறந்தது.  (எண்ணெய், நெய், வனஸ்பதி, மாமிசம் உள்பட)

Sunday, July 4, 2010

விஷம் முறிய கருவேலம்

விஷம் முறிய கருவேலம் மரத்தின் கொழுந்தை மைபோல் அரைத்து கோட்டை பக்கு அளவு எடுத்து ஒரு டம்ளர் திருடன் கலந்து உள்ளுக்கு கொடுத்து விட்டால் விஷம் முறிந்துவிடும்.  கருவேல மரம் குச்சி பல்துலக்க மிகமிக அருமையானது.

உடல் பருமன் குறைக்க பொன்னாவரை

உடல் பருமன் குறைக்க பொன்னாவரை கீரையின் வதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம், சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு உடல் பருமன் குறையும்.

மூளை காய்ச்சல்

மூளை காய்ச்சல் வராமல் தடுக்க திருநீற்று பச்சிலை சாறு, தும்பை இலை சாறு, கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச வர மூளை காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே இதனை உபயோகித்தால் முன்னதாகவே மூளை காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

காய்ச்சல் குணமாக துளசி இலை

காய்ச்சல் குணமாக துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றத்தை அரைத்து வெயிலில் கைய வைத்து பத்திரப்படுத்தவும்.  காய்ச்சல் வரும்போது அரை கரண்டி காலையும் மாலையும் வெந்நீரில் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.  

இளமையுடன் வாழ நெல்லிக்காய்

இளமையுடன் வாழ நெல்லிக்காய் மிக அருமையான மருந்து.  நெல்லிக்காயை கோட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.  நெல்லிக்காயை ஏதாவது ஒரு இலையுடன் சேர்த்து தினமும் கால் கரண்டி அளவில் சாப்பிடலாம்.  நெல்லிகையை இவ்வாறு சாப்பிட்டு வர இளமை நீடிக்கும்.